follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுகொழும்பில் உள்ள மதுபானக் கடைகளில் திடீர் சோதனை

கொழும்பில் உள்ள மதுபானக் கடைகளில் திடீர் சோதனை

Published on

கொழும்பு பிரதேசத்தில் மதுபானம் விற்பனை செய்யும் R.B.04 உரிமம் பெற்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாதுகாப்பு முத்திரைகள் இல்லாத மற்றும் சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு முத்திரையுடன் கூடிய வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, பாதுகாப்பு முத்திரை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட உரிமம் பெற்ற வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

குறித்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மேலதிக விசாரணைகளுக்காக மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....