follow the truth

follow the truth

August, 23, 2025
HomeTOP1ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

Published on

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பான விடயம் தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு, பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக துணைவேந்தரை அப்பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கும் வரை தனது தொழில் நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த குறிப்பிட்டார்.

இதேவேளை, ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவி நீக்கம் செய்யக்கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை கல்வி அமைச்சுக்கு முன்பாக அடையாளப் பேரணியொன்றில் ஈடுபட்டதுடன் பின்னர் அமைச்சின் செயலாளரை சந்தித்து பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...