follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

Published on

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து ஆசிரியர்களும் இச்சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுடன், சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சம்பளம் தொடர்பான தீர்மானங்களை எடுத்தல் உள்ளிட்ட ஆசிரியர்களின் தேவைகளை நிர்ணயம் செய்யும் பணியும் இந்த சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சுயாதீன அமைப்பாக செயற்படும் இந்த சபையின் அமைப்பு தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த சபை நியமிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிலவி வரும் ஆசிரியர் சம்பள ஏற்றத்தாழ்வுகளில் மூன்றில் ஒரு பங்கு கணக்கிட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு, மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு இந்த சபையை நிறுவிய பின் வழங்கப்படும்.

அத்துடன், முரண்பாடுகளை நீக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள வரவு செலவுத் திட்ட யோசனையில் உள்ளடக்கப்படும்.

1994 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆசிரியர் சேவை அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால் இந்த ஆசிரியர் சபை அமைக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...