follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி IMF பணிப்பாளரின் மதிப்பீடு

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி IMF பணிப்பாளரின் மதிப்பீடு

Published on

இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றனர்.

கடன் நிலைத்தன்மை மற்றும் வெளிப்புற நம்பகத்தன்மை என்பவற்றை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பொருளாதார மீட்சி, பணவீக்கம் குறைவடைந்துள்ளமை மற்றும் கையிருப்பு அதிகரித்துள்ளமை என்பன இந்த திட்டத்தின் சிறந்த தொடக்கமாக உள்ளன.

இதன்படி, மூன்றாவது மீளாய்வுக்குப் பின்னர் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளது.

அதேநேரம், மீதமுள்ள ஏனைய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் நிறைவு செய்து வருகின்றனர்.

இந்த கூட்டு முயற்சியானது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் வெற்றிக்கு ஆதரவளிக்கும் எனச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...