follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுபண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகள் தொடர்பான அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகள் தொடர்பான அறிவிப்பு

Published on

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் தொடர்ச்சியாக 24 மணிநேரம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

ஆதலால், கவனமாக வாகனம் செலுத்துவதும், வீதி விதிகளை கடைப்பிடிப்பதும் மிகவும் அவசியம். அதிவேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும்  போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.

அத்துடன்,போக்குவரத்து விதிகளை மீறாத வகையில் அனைத்து சாரதிகளும் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...