follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2மலேசியா, தாய்லாந்தில் கடும் மழை மற்றும் புயல் எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

மலேசியா, தாய்லாந்தில் கடும் மழை மற்றும் புயல் எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

Published on

மலேசியா மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 12 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட மலேசியாவில் 122,000 இற்கும் அதிகமான மக்களும், தெற்கு தாய்லாந்தில் சுமார் 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடும் மழை மற்றும் புயல் எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்குத் தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் செய்திகளில் வீடுகள் நீரில் மூழ்கியிருக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன.

தாய்லாந்தின் சதெங் நோக் மாவட்டத்தில், வெள்ளத்தில் மூழ்கிய வீட்டின் கூரையிலிருந்து சிறுவன் ஒருவனை மீட்புப் பணியாளர்கள் மீட்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெற்கு தாய்லாந்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 534,000 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

அதேவேளை, முடிந்தவரைத் துரிதகதியில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்குச் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மலேசியப் பிரதமர் பெய்ரன்ங்ரன் ஷினவாத்ரா (Paetongtarn Shinawatra) உறுதியளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...