follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1பண்டிகைக் காலங்களில் அரிசி விலை உயரும்

பண்டிகைக் காலங்களில் அரிசி விலை உயரும்

Published on

அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், கீரி சம்பாவின் விலை 300 ரூபாவாகவும், நாடு 270 ரூபாவாகவும், சம்பா 290 ரூபாவாகவும், விலைபோவதை தடுக்க முடியாது என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவினால் திணிக்கப்பட்ட வர்த்தமானியை உடனடியாக நீக்கி, சந்தையில் உள்ள தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப அரிசியின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொலன்னறுவை பொங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முதித் பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தையில் நாட்டு அரிசிக்கு அதிக தட்டுப்பாடு நிலவி வருவதால், கடைகளில் நாட்டு அரிசி கிடைப்பதில்லை, இதை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யாமல், அதிகளவில் இருப்பு வைத்துள்ள அரிசியை மதிப்பிட வேண்டும், பண்டிகைக் காலங்களில் நெல்லை அரிசியாக மாற்றி நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கான சூழலை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

விலையைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வது தீர்வாகாது, அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தி அரிசியின் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடம் கொடுப்பது அரிசி விவசாயிகளையும் அரிசி நுகர்வோரையும் பாதுகாப்பதற்கான அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரின் கவனத்தை செலுத்த வேண்டும் என முதித் பெரேரா மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலியவும் குடும்பத்தினரும் சிக்கினார்கள் – குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, 97...

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று...

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக...