follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுலொஹானுக்கும் மனைவிக்கும் பிணை

லொஹானுக்கும் மனைவிக்கும் பிணை

Published on

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ரஷி பிரபா ரத்வத்த ஆகியோர் இன்று (05) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இருவருக்கும் தலா 25,000 ரூபா ரொக்கப் பிணையும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், லொஹான் ரத்வத்தவிற்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான அம்முதெனிய சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.

ஒக்டோபர் 30 ஆம் திகதி, லொஹான் ரத்வத்த, அந்தக் காரைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், மிரிஹான பொலிஸாரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில், லொஹான் ரத்வத்தவின் மனைவியான ரஷி பிரபா ரத்வத்தவையும் நவம்பர் 4ஆம் திகதி கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...