follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் தாக்கும் - இஸ்ரேல் பிரதமர்

போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் தாக்கும் – இஸ்ரேல் பிரதமர்

Published on

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காசாவில் தற்போதைக்கு போரை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

போர் தொடங்கி கிட்டத்தட்ட 14 மாதங்கள் நிறைவுற்ற நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “நாங்கள் இப்போது போரை நிறுத்தினால், ஹமாஸ் மீண்டும் வந்து தாக்கலாம் – இது நடப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என்று கூறினார்.

எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க “ஹமாஸ்-ஐ அழித்தொழித்தல், அதன் இராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை ஒழித்தல்” என்ற இலக்கை நிர்ணயித்து இருப்பதாக நெதன்யாகு மீண்டும் கூறினார். எனினும், இந்த இலக்கை நாங்கள் இன்னும் முழுமையாக அடையவில்லை என்று கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கடந்த ஒக்டோபர் 23ம் திகதி கூறும் போது, “இஸ்ரேல் ஹமாஸ் இனது இராணுவத் திறனை சிதைக்க முடிந்தது. அதன் தலைமையை அடுத்தடுத்து கொன்று குவித்தது. அந்த வெற்றிகளுடன், பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அடுத்து என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது” என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...