follow the truth

follow the truth

August, 21, 2025
HomeTOP2போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் தாக்கும் - இஸ்ரேல் பிரதமர்

போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் தாக்கும் – இஸ்ரேல் பிரதமர்

Published on

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காசாவில் தற்போதைக்கு போரை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

போர் தொடங்கி கிட்டத்தட்ட 14 மாதங்கள் நிறைவுற்ற நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “நாங்கள் இப்போது போரை நிறுத்தினால், ஹமாஸ் மீண்டும் வந்து தாக்கலாம் – இது நடப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என்று கூறினார்.

எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க “ஹமாஸ்-ஐ அழித்தொழித்தல், அதன் இராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை ஒழித்தல்” என்ற இலக்கை நிர்ணயித்து இருப்பதாக நெதன்யாகு மீண்டும் கூறினார். எனினும், இந்த இலக்கை நாங்கள் இன்னும் முழுமையாக அடையவில்லை என்று கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கடந்த ஒக்டோபர் 23ம் திகதி கூறும் போது, “இஸ்ரேல் ஹமாஸ் இனது இராணுவத் திறனை சிதைக்க முடிந்தது. அதன் தலைமையை அடுத்தடுத்து கொன்று குவித்தது. அந்த வெற்றிகளுடன், பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அடுத்து என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது” என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...