follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பாரிய மோசடி தொடர்பில் பிரதி அமைச்சரிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு

பாரிய மோசடி தொடர்பில் பிரதி அமைச்சரிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு

Published on

நீண்ட தூர ரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்து பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட குழுவினர், ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனால், பயணிகள் கடும் அவதியுறுகின்றனர்.

அந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் தொலைபேசி இலக்கங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதன்படி சம்பந்தப்பட்ட மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய முடியும்.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை சரிபார்ப்பதை கடுமையாக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...