follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பைசர் முஸ்தபா பொது உடன்படிக்கையின் மூலம் பரிந்துரைப்பு : புதிய ஜனநாயக முன்னணி

பைசர் முஸ்தபா பொது உடன்படிக்கையின் மூலம் பரிந்துரைப்பு : புதிய ஜனநாயக முன்னணி

Published on

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபா பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கட்சியின் செயலாளர் ஷியாமலா பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு பிரதிநிதியை நியமிக்குமாறு தினமும் தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

2024 பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் கீழ் 4 பெரிய கட்சிகள் போட்டியிட்டன.

அவையே பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் புதிய கூட்டணி.

அதன்படி, பொதுத் தேர்தலில் 2 தேசிய பட்டியல் உறுப்பினர்களை புதிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியிருந்தது.

ஒன்றுக்கு ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டார்.

ஆனால், கூட்டணி கட்சிகளின் உடன்பாடு இல்லாமல் இந்த நியமனம் நடந்ததாக பின்னர் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா அனுப்பியுள்ள கடிதத்தில் காஞ்சன விஜேசேகரவுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் உடன்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...