follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு

Published on

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினத்துக்குள் சுமார் 70,000 மெட்ரிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருந்த போதும் இதுவரை 26,000 மெட்ரிக் தொன் அரிசி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது

அத்துடன் உள்நாட்டு அரிசி உற்பத்தியாளர்களும் போதுமான அளவில் நாட்டரிசியை சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சம்பா, கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே நேற்றைய தினம் முடிவடைய இருந்த அரிசி இறக்குமதிக்கான கால எல்லையை அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் நீடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...