follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பாதாள உலகத்தில் சம்பளம் வாங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் – சுனில் வட்டகல

பாதாள உலகத்தில் சம்பளம் வாங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் – சுனில் வட்டகல

Published on

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பளம் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருப்பதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்திருந்தார்.

இன்று (26) தெரண தொலைக்காட்சி அலைவரிசையூடான BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் இல்லாதொழிக்க எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு முன் வெளிப்படுத்த முடியாது என அங்கு அவர் சுட்டிக்காட்டினார்.

“பாதாளம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் கீழ் சம்பளம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர்.
ருவன்வெல்லவில் உள்ள முழு பொலிஸ் படையையும் நாங்கள் மாற்ற வேண்டியிருந்தது. புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த தீர்மானத்தினை எடுக்க வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, அவிசாவளையில் ஒரு குழுவும் உள்ளது, அவர்கள் ஒரு வலையமைப்பின் ஊடாக கோர்ந்துள்ளனர். பாதாள உலக பணம் பொலிஸாருக்கும் செல்கிறது..”

“நாங்கள் பொலிஸ் மா அதிபரை அழைத்து வந்து கலந்துரையாடினோம். இப்போது பாதாள உலகத் தலைவர் மத்துகமவில் இருக்கிறார்.”

“இதை ஒரு பிரச்சினையாகவே பார்க்கிறோம். நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவது கடினம். போதைப்பொருள் மற்றும் பாதாள உலகம் தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிஸ்மா அதிபரிடம் உள்ளது.”

“பொது ஆணையை மதிக்குமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.”

“நேற்று முன்தினம் மீண்டும் பாதாள உலக சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இதில் குறுகிய சந்தர்ப்பவாத அரசியலும் உள்ளது.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...