follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் IMF ஆட்சேபனைகள் இல்லை

அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் IMF ஆட்சேபனைகள் இல்லை

Published on

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

“25,000 ரூபாய் என்றி இல்லை, நாங்கள் இலக்கத்தினை பார்க்க மாட்டோம். யாரும் இதற்கு பதறத் தேவையும் இல்லை.

இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்புக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்தார்.

ஆனால் அரசு ஊழியர்கள் நல்ல பதில் அளித்தனர். இது பொது ஊழியர்களை ஏமாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட ஒன்று, உண்மை அல்ல.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...