follow the truth

follow the truth

May, 4, 2025
Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் டிராபி தொடர்- இந்திய அணியின் ஆலோசகராக தோனி?

சாம்பியன்ஸ் டிராபி தொடர்- இந்திய அணியின் ஆலோசகராக தோனி?

Published on

ஒன்பதாவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பெப்ரவரி) 19ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான அணிகளை வருகிற 12ம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது. இந்த வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய பெப்ரவரி 12-வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் எம்எஸ் டோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்கில் வெளியாகி வருகிறது.

2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணத்திற்கான தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டார். அதில் இந்திய அணி கிண்ணத்தினை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...