follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுஅரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தயாராகும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தயாராகும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

Published on

யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக தற்போதைய பிரேரணை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்போம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“கூட்டுப் பொறுப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடுகிறோம். கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். ஆனால், கூட்டுப் பொறுப்பில் சிக்கல் இருந்தால், அதற்கு தீர்வு காண வேண்டும்.

இது குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில் தனித்தனியாக கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது. யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால், நாம் அளிக்கும் வாக்கு தீர்மானத்திற்கு எதிராகவே அமையும்.

இதேவேளை, தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடி செல்ல மாட்டோம், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் நான் அரசாங்கத்தில் இருக்க மாட்டேன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடுவது என்பது இந்த வேளையில் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று என திரு பசில் ராஜபக்ச அமைச்சரவையில் மிகத் தெளிவாகத் தெரிவித்தார்.

இறக்குமதியை கட்டுப்படுத்துவதே எங்கள் முன்மொழிவு. ஆனால், இறக்குமதியை கட்டுப்படுத்தக் கூடாது என்பது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...