follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1இலங்கையில் மருந்து பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க அரசு அவதானம்

இலங்கையில் மருந்து பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க அரசு அவதானம்

Published on

எதிர்வரும் காலங்களில் மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தால் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த எதிர்பார்ப்பதாக அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார அமைச்சின் செயலாளர் தொடர்ந்தும் கருத்துக்களை தெரிவிக்கையில்;

“சுகாதார நிலைமைகள் மதிப்பிடப்படும் பல்வேறு நேரங்களில் இந்த சோதனைகள் செய்யப்பட வேண்டும்.”

ஆனால் முறைப்பாடுகள் இருந்தால் மட்டுமே நாங்கள் அதைத் தொடர்கிறோம். அது போதாது. அரசாங்கம் இப்போது இலங்கையில் ஒன்று அல்லது இரண்டு ஆய்வகங்களை நிறுவுவதில் கவனம் செலுத்தியுள்ளது.”

“இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும், இந்த சுகாதார அமைப்பு ஒரு அரச சுகாதார அமைப்பாக இருப்பதால் மற்றும் மருந்துகளின் விநியோகம் மையப்படுத்தப்பட்டிருப்பதாலும் கொள்முதல் செயல்முறை பல வளர்ந்த நாடுகளில் மருந்துகளின் கொள்முதல் செயல்முறையை விட பெரியது என்பதைக் குறிக்கிறது.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...