follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1மனுஷ CID இல் வாக்குமூலம் வழங்கத் தயார் என நீதிமன்றுக்கு அறிவிப்பு

மனுஷ CID இல் வாக்குமூலம் வழங்கத் தயார் என நீதிமன்றுக்கு அறிவிப்பு

Published on

தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கும் சம்பவம் தொடர்பில் நாளை (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20) அறிவித்துள்ளார்.

மனுஷ நாணயக்காரவின் பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ், தம்மை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுவிக்குமாறு கோரி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தனது கட்சிக்காரரை அழைத்து வாக்குமூலம் பெறுமாறும் அதன் பின்னர் இந்த மனுவின் உண்மைகளை வேறொரு நாளில் உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மனுவை வரும் 22ம் திகதி அழைத்து உண்மைகளை சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மரத்தில் மோதி விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள...