follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1கொள்கலன் லாரி சாரதிகள் எச்சரிக்கை

கொள்கலன் லாரி சாரதிகள் எச்சரிக்கை

Published on

கொள்கலன் நெரிசலை நிறுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த வாரம் கொள்கலன் லாரி சாரதிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பலய’ அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சங்கம், இந்த நெரிசலைக் குறைப்பதற்கான ஒரே வழி டிஜிட்டல் முறையைப் பின்பற்றுவதே என்று கூறியது.

பல மாதங்களாக நீடிக்கும் கொள்கலன் லாரி நெரிசல் குறித்து பல சந்தர்ப்பங்களில் செய்தி வெளியிட்டிருந்தாலும், இன்னும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் கூறுகையில், அனுமதிப் பணிகளின் போது ஏற்படும் சிக்கல்களால் இந்த நெரிசல் ஏற்படுகிறது.

தற்போதுள்ள நெரிசலைக் குறைப்பதற்காக துறைமுகம் அதிக எண்ணிக்கையிலான கொள்கலன்களை ஆய்வு செய்யாமல் வளாகத்திலிருந்து வெளியே அனுப்புவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், துறைமுக வளாகத்திற்குள் எழுந்துள்ள இந்தப் பிரச்சினை குறித்து நேற்று குறித்த நிகழ்ச்சியின் மூலம் விவாதிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு...

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், நாளை (ஜூலை 07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30...

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...