follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1ஆயுர்வேத பொருட்களை தரமான தரத்தில் வழங்க நடவடிக்கை

ஆயுர்வேத பொருட்களை தரமான தரத்தில் வழங்க நடவடிக்கை

Published on

ஆயுர்வேத மருத்துவம் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனத் துறையில் உள்ள அனைத்து தயாரிப்புகள் மற்றும் பொருட்களையும் தரமான தரத்தில் வழங்குவதை இலக்காக கொண்டு ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ராஜகிரிய ஆயுர்வேத தேசிய மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் ஒழுங்குமுறை சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஆயுர்வேத துறையின் தரமான மற்றும் உயர்தர பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை எனவும் தற்போது அது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் , ஆயுர்வேத மருந்துகளின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் உட்பொருட்களை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் புதிய உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...