follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2பாகிஸ்தானில் அடுக்குமாடி இடிந்து வீழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் அடுக்குமாடி இடிந்து வீழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

Published on

கராச்சியில் அமைந்துள்ள ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் 15 பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் அடங்குவதாகவும், மேலும் பலர் கீழே சிக்கியிருக்கும் வாய்ப்பு இருப்பதால், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடியில் 40க்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக் கூடியவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தின் காரணங்கள் தற்போது வரை தெரியவில்லையெனினும், கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளாக பழமை வாய்ந்தது என்பதும், அது கட்டுமான நெறிமுறைகளை பின்பற்றியதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை நீர்மாணிக்க அவதானம்

காட்டு யானைகளுக்கு நோய் ஏற்படும் போது அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முறைமையொன்று இல்லை என்றும், அதனால் நடமாடும் மற்றும்...

கர்ப்பமான பாடசாலை மாணவிகளுக்கு ரூ.1 இலட்சம் உதவித்தொகை – ரஷ்யாவில் புதிய அரசு திட்டம்

மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத் திட்டமொன்று அறிமுகமாகியுள்ளது. கர்ப்பமான பள்ளி மாணவிகளுக்கு...