follow the truth

follow the truth

May, 4, 2025
HomeTOP2டெஸ்ட் களத்திலிருந்து திமுத் ஓய்வு?

டெஸ்ட் களத்திலிருந்து திமுத் ஓய்வு?

Published on

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவருமான திமுத் கருணாரத்ன, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுலா ஆஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போட்டி நாளை மறுநாள் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது திமுத் கருணாரத்னவின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.

36 வயதான திமுத் கருணாரத்ன இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,172 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

ஒரு டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 244 ஆகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...