follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1உப்பு விலையைக் குறைக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை

உப்பு விலையைக் குறைக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை

Published on

கடந்த 25 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர உப்பை நியாயமான விலையில் சந்தையில் வெளியிடுவதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.

சந்தையில் விற்கப்படும் உப்பின் விலைகள், கடந்த காலத்தில் பல்வேறு விலைகளில் உப்பு விற்பனை, பருவகால உப்பு பற்றாக்குறை மற்றும் தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அதிகாரசபை நடத்திய விலை கணக்கெடுப்புகளின்படி விவாதிக்கப்பட்டது.

அரசாங்கம் மற்றும் முன்னணி உப்பு உற்பத்தியாளர்கள் உட்பட பதினெட்டு நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், தற்போதைய சந்தை சூழ்நிலையால் நுகர்வோர் சிரமப்படாமல் இருக்க விலைகளைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உப்பு சந்தைக்கு வரவிருப்பதால், மார்ச் மாத இறுதிக்குள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் விற்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், அதுவரை விலை உயர்வு இல்லாமல் விலை நிலையாக இருக்க வேண்டும் என்ற அதிகாரசபையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...