follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1தபால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைத்தும் தயார்

தபால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைத்தும் தயார்

Published on

தபால் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்தர இதனைக் குறிப்பிட்டார்.

ஊழியர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் வேதன உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைகள் குறித்து தபால் மா அதிபருடன் கலந்துரையாடப்பட்டதாகவும், எனினும், சாதகமான எந்த தீர்வும் எட்டப்படவில்லை எனவும் அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...