follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச் 17ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (12) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி, தபால் மூலம் ஏற்படக்கூடிய தாமதங்கள் தொடர்பில் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 17ம் திகதி நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், மார்ச் 13 முதல் 17ம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை, சான்றிதழ் வழங்கும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...