follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

Published on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

போட்டிக்கான இடம், அட்டவணை எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மகளிர் உலகக் கிண்ண தொடருக்கான இடங்களைத் தெரிவு செய்ய ஒருங்கிணைப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 2025 – 2026ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிக்கான அட்டவணையும் குறித்த கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் போது, மதுபானம், புகையிலை சம்பந்தமான விளம்பரங்களைத் தடை செய்யுமாறு அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை அறிவுறுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் இந்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...