follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இராஜ் CID முன்னிலையில் ஆஜர்

இராஜ் CID முன்னிலையில் ஆஜர்

Published on

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன இன்று (26) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

நேற்று (25) தனது யூடியூப் சேனலில் சுதத்த திலகசிறி தொடர்பில் வெளியிட்ட ஒரு தகவல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தலதா மாளிகைக்கு பணம் வழங்குமாறு மோசடியான முறையில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் தான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வௌியிட்டதாக தெரிவித்த இராஜ், குறித்த காணொளி உலகிலுள்ள பெரும்பாலான இலங்கையர்கள் பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...