follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2மியன்மார் நில அதிர்வில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மியன்மார் நில அதிர்வில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Published on

மியன்மாரில் நேற்று மாலை 5.1 மெக்னிடியூட் அளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்று முன்தினம் ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் பின்னதிர்வுகளால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்ததுடன், 3,400 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

மியன்மாரின் நே பேய் தாவ பகுதியிலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவானதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. நில அதிர்வினால் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், நில அதிர்வினால் பாரியளவில் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 4 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே மின்சாரம் விநியோகிக்கப்படுவதாகவும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்தின் பெங்கொக் பகுதியில் இடிபாடுகளுக்குள் சுமார் 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் எனவும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரேசில் வந்தடைந்த இந்தியப் மோடி

பிரேஸிலியா – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜூலை 6ஆம் திகதி பிரேசில்...

எலான் மஸ்க் நிறுவிய புதிய அரசியல் கட்சி : ட்ரம்ப் கடும் அதிருப்தி

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில்...

பாகிஸ்தானில் அடுக்குமாடி இடிந்து வீழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

கராச்சியில் அமைந்துள்ள ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததாக சர்வதேச...