follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1"சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக எரிபொருள் விலையை குறைக்க முடியாது"

“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக எரிபொருள் விலையை குறைக்க முடியாது”

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதால் எரிபொருளின் விலையை மேலும் குறைக்க முடியாது என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசிங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்

“நாங்களும் எரிபொருள் விலையை குறைக்க விரும்புகிறோம், ஆனால் தற்போது அதை செய்ய வழியில்லை, ஏனென்றால் நாங்கள் இன்னும் ஐஎம்எஃப் நிபந்தனைகளுடன் இருக்கிறோம். வருமானம் மற்றும் செலவுகளைப் பார்க்க வேண்டும்.

அரசாங்கத்தின் வருமானத்தை ஒரே நேரத்தில் குறைப்பது கடினம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பக்கம் செல்ல வேண்டும். அதனால்தான் இந்தியப் பிரதமர் இங்கு வரும்போது மின்சார கட்டணத்தையும் குறைக்க வேண்டும். எரிபொருளுடன் சரிசெய்தல் என்பது உங்களுக்குத் தெரியும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...