follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுகுஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Published on

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (02) இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பந்து வீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாகப் பெற்றுக்கொடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...