follow the truth

follow the truth

August, 23, 2025
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு

Published on

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து மேலும் விவாதிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (03) நாட்டிற்கு வர உள்ளது.

இந்தக் குழு, 11ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, நாட்டின் அரசியல் மற்றும் நிதி அதிகாரிகளுடன் மேலும் கலந்துரையாடல்களை நடத்த உள்ளது.

இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (ECF) தொடர்பான மூன்றாவது மதிப்பாய்வு பெப்ரவரி 28 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அதன் நிர்வாகக் குழு 334 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்க முடிவு செய்ததிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் முதல் குழு இதுவாகும்.

இந்த விவாதங்கள், டிசெம்பர் 2024க்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட குறிகாட்டிகள் மற்றும் இலக்குகளை இலங்கை எவ்வாறு அளவு ரீதியாக அடைந்துள்ளது என்பது குறித்து கவனம் செலுத்தும்.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி அன்று, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு இலங்கைக்கு மொத்தம் 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை வழங்க முடிவு செய்தது.

மேலும், நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர்கள் உட்பட 1.34 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...