follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நான்காவது தடுப்பூசி

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நான்காவது தடுப்பூசி

Published on

கொவிட்  தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின் தேவைப்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை மூன்றாவது தடுப்பூசியை உரிய முறையில் மக்கள் பெற்றுக் கொள்ளவில்லை. மூன்றாவது தடுப்பூசியை பெற்றவர்களுக்கு சிறிய கால அவகாசம் தேவைப்படுகின்றது.

அதன் பின்னர் நான்காவது தடுப்பூசி குறித்து சிந்திக்க வேண்டும். எனினும் தரவுகள் மீளாய்வு செய்த பின்னர் நான்காவது தடுப்பூசி வழங்கப்படலாம்.

நாம் அனைவரும் இந்த தடுப்பூசிக்கு புதியவர்கள். இதனால் கால அவகாசத்துடன் நான்காவது தடுப்பூசி, ஐந்தாவது தடுப்பூசி அல்லது ஆறாவது தடுப்பூசி வழங்கப்படுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவின் ஊடாக உலக நாடுகளின் தடுப்பூசிகள் தொடர்பிலான தரவுகள் குறித்து ஆராய்ந்த பின்னர் எதிர்கால தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ் கட்டணம் 0.55 சதவீதத்தால் குறைப்பு

எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 0.55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள்...

போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட மூன்று...

ஊழலுக்கு எதிரான பணிகளுக்காக இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜப்பான்

ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத்...