follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிசாருக்கு விசேட அறிவுறுத்தல்கள்

தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிசாருக்கு விசேட அறிவுறுத்தல்கள்

Published on

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் மற்றும் செலவின ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தை மையப்படுத்தி மற்றுமொரு கட்டம் இன்று (04) நடைபெறவுள்ளது.

இதில் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தவிர, தேர்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும், பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பல கட்டங்கள் அண்மையில் பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி, முழு நாடளாவிய ரீதியில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருட உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

நேற்றைய (03) வரை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 05 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...