follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பொலிசாருக்கான தனித்துவமான ஊதிய அமைப்பு ஒன்றினை உருவாக்க நடவடிக்கை

பொலிசாருக்கான தனித்துவமான ஊதிய அமைப்பு ஒன்றினை உருவாக்க நடவடிக்கை

Published on

பொலிசாருக்கான தனித்துவமான ஊதிய அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற செயல்கள் அமைச்சரான ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (10) பாராளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

அதற்கான வரைமுறை திட்டம் தற்போது செயற்பாட்டு பொலிஸ்மா அதிபரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதையும் அவர் கூறினார்.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் இணைத்து புதிய ஊதிய அமைப்பை செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் உள்ள பல்வேறு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...