follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பொலிசாருக்கான தனித்துவமான ஊதிய அமைப்பு ஒன்றினை உருவாக்க நடவடிக்கை

பொலிசாருக்கான தனித்துவமான ஊதிய அமைப்பு ஒன்றினை உருவாக்க நடவடிக்கை

Published on

பொலிசாருக்கான தனித்துவமான ஊதிய அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற செயல்கள் அமைச்சரான ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (10) பாராளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

அதற்கான வரைமுறை திட்டம் தற்போது செயற்பாட்டு பொலிஸ்மா அதிபரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதையும் அவர் கூறினார்.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் இணைத்து புதிய ஊதிய அமைப்பை செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் உள்ள பல்வேறு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...