follow the truth

follow the truth

August, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபசிலின் கோரிக்கையை ஏற்ற இந்தியா : 1.9 பில்லியன் டொலர் கடன் உதவி

பசிலின் கோரிக்கையை ஏற்ற இந்தியா : 1.9 பில்லியன் டொலர் கடன் உதவி

Published on

இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக 1.9 பில்லியன்  டொலர்  கடன் உதவி  வழங்குவது குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது.

இந்த நிதி தனிப்பட்ட மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும் அத்தியவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள 100 கோடி டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் 50 கோடி டொலர் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளவும் 40 கோடி டொலர் இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) கைமாற்று கடன் அடிப்படையில் வழங்கவும் தயாராகி வருவதாக தெரியவருகிறது.

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரிடம், இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விடுத்த கோரிக்கையின் பலனாக இந்த நிதி கிடைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...