follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1மஸ்க் - மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

Published on

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி வழியாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டதாக இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா, அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நேரத்தில் இந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு வர உள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...