follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉள்நாடுதங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

Published on

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171 டொலர் அதிகரித்து 3486 டொலராக பதிவாகியுள்ளது.

உலக சந்தையின் இந்த விலை அதிகரிப்பு இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் வழங்கிய தகவலின்படி, இன்று 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 5000 ரூபாவினால் அதிகரித்து 277,000 ரூபாவாக விற்பனையாகிறது.

அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 3000 ரூபாவினால் அதிகரித்து 255,000 ரூபாவிற்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மாத்திரம் ஆபரண தங்கத்தின் விலை 15000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தங்கத்தின் விலை எதிர்வரும் காலங்களில் 30 முதல் 40 சதவீதம் வரையில் குறைவடையக்கூடும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகப் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...