follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1'ஆணைக்குழுவின் கருத்தை நாட்டுக்குத் தெரிவியுங்கள்' - தேர்தல் ஆணையத்திற்கு பொஹட்டுவ கடிதம்

‘ஆணைக்குழுவின் கருத்தை நாட்டுக்குத் தெரிவியுங்கள்’ – தேர்தல் ஆணையத்திற்கு பொஹட்டுவ கடிதம்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத நிர்வாகங்களுக்கு அரச நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்ற ஜனாதிபதி உரையை தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கடிதம், கட்சியின் சட்டத்துறை ஒருங்கிணைப்பின் கீழ், பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்களால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சராக கூறிய இந்த அறிக்கை மிகவும் கடுமையான ஒன்று எனக் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், தேர்தல் ஆணைக்குழுவை அது தொடர்பாகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டதாகவும் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பியதாகத் தெரிவித்தபோதிலும், இது போதுமானதல்ல என்றும், அரசின் நிலைப்பாட்டை நாட்டிற்கு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்ததாகவும், அதே யுக்தியை 2/3 பெரும்பான்மையைப் பெறவும் பயன்படுத்தியதாகவும் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தற்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் அதே வகை அரசியல் யுக்தியை தேசிய மக்கள் சக்தி பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச நிர்வாகங்களுக்கு நிதி ஒதுக்கத்தை நிறுத்துவதற்கான எந்த அதிகாரமும் ஜனாதிபதிக்கு இல்லை என்றும், அதற்கான ஒதுக்கீடுகள் சட்டப்படி நடைமுறைக்கு வருவதாகவும் சாகர காரியவசம் கூறினார்.

ஜனாதிபதி அந்த நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்துக் கூறவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட நிதிகள் உரிய நிர்வாகங்களுக்கு வழங்கப்படும் என அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...