follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் - ஜனாதிபதி

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

Published on

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றைப் பயன்படுத்தி முறியடிக்கப்படும் என, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“.. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

பிரிந்து தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றிணைய முயல்கின்றன.

அவ்வாறான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவிருந்தால், அவ்வாறான தேர்தலை நாளைய தினமே நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

தற்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கூறுகின்ற கருத்துக்களில் உள்ள தவறுகளை மாத்திரமே எதிர்க்கட்சியினரால் சுட்டிக்காட்ட முடிகிறது.

இந்தநிலையில் 152 உள்ளூராட்சி மன்றங்களில் ஆரம்பத்திலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்.

ஒரு சிலருக்கே ஆட்சியமைக்குமாறு மக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் வாக்குகளை வழங்கினர்.

ஏனையோரை வெறுமனே உள்ளூராட்சி மன்றங்களைப் பார்வையிட்டு வருவதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, மக்களுக்கு பணியாற்ற வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

சிதைவுகள் அனைத்தும் ஒன்றிணைந்து மக்கள் ஆணைக்குச் சவால் விடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதன்படி, மக்கள் ஆணைக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாயின் அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த முயற்சி முறியடிக்கப்படும்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...