தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
அவரிடம் இருந்த முக்கியமான ஆவணங்கள் சிலவற்றையும் துப்பாக்கிதாரிகள் எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதாக துசித ஹல்லோலுவ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோடு, இது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அவரது சட்டத்தரணி அகலங்க உக்வத்த ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த 4ஆம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட அறிக்கை ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதோடு, பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் துசித ஹல்லொலுவ மற்றும் குறித்த அறிக்கையை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக துரித விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.