இன்று (26) காலை பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதற்கான காரணம், பல ரயில் சாரதிகள் சுகயீன விடுப்பு அறிவித்ததால் தான் என்று ரயில்வே பிரதி பொது மேலாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார்.
இதன் காரணமாக, இன்று காலை பல பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சாரதிகள் சுகயீன விடுப்பு அறிவித்ததால் இன்று இயக்கப்படவிருந்த கிட்டத்தட்ட 15 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில்வே பிரதி பொது மேலாளர் வி.எஸ். பொல்வத்தகே மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த ரயில் சேவை ரயில் சாரதிகளின் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு பராமரிக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் அவர்கள் தங்கள் தேவைகளுக்காக விடுப்பு கோரினாலும், ரயில்வே துறையால் அந்த விடுப்பை வழங்க முடியாது. எனவே, அவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப சுகயீன விடுப்பைப் முறைப்பாடு அளித்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.”