இஸ்ரேலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் காலாவதியான விசாவின் செல்லுபடியாகும் காலத்தினை, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு, அந்த நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, வேலைவாய்ப்பு, சுற்றுலா, தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் தற்காலிக வதிவிட விசா ஆகிய பிரிவுகளின் கீழ் இஸ்ரேலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் காலாவதியான விசாவின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்படவுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் – ஈரான் போரில் காயமடைந்த இலங்கையர்கள் நால்வர், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களது நிலைமையைத் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும், இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.