சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியப் பணத்தின் மதிப்பு ஒரே ஆண்டில் 3 மடங்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டின் அறிக்கைப்படி அந்த பணத்தின் மதிப்பு இந்திய ரூபாவில் 37,600 கோடி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் தனிநபர் கணக்கு கொண்டுள்ளவர்களின் பணம் மொத்த இந்திய ரூபாவில் 3,675 கோடி உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.