follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP1இலங்கையின் தேயிலை இறக்குமதியை மேம்படுத்த ஈரான் தயார்

இலங்கையின் தேயிலை இறக்குமதியை மேம்படுத்த ஈரான் தயார்

Published on

மத்திய கிழக்கு நெருக்கடியை தொடர்ந்து இலங்கையுடனான வர்த்தக உறவுகளை, விசேடமாக தேயிலை இறக்குமதியை மேம்படுத்த தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் – இஸ்ரேலுக்கு இடையிலான 12 நாள் மோதலுக்குப் பின்னர், ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மோதலின் போது தற்காலிக இடையூறுகள் இருந்த போதிலும், வர்த்தக பாதைகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

போரைக் காட்டிலும் ராஜதந்திரத்தையே ஈரான் விரும்புவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோதலை அதிகரித்ததற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குற்றம் சாட்டிய அவர், இலங்கையின் நடுநிலை மற்றும் சமநிலையான நிலைப்பாட்டுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தில் அமெரிக்காவிற்கு எதிராக முறையான முறைப்பாடளிக்க ஈரான் தயாராகி வருகிறது என, இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...

போர்ட் சிட்டி கடலில் காணாமல் போன பல்கலை மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீராடச்சென்று நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று(27)...

சிக்குன்குன்யா – மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்

நுளம்புகளால் பரவக்கூடிய வைரஸ் ஊடாக சிக்குன்குன்யா ஏற்படுகின்றது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவில் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப்...