follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP1பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிக்க தீர்மானம்

பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிக்க தீர்மானம்

Published on

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்காக போட்டியிடுவதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் கடந்த மார்ச் 14 ஆம் திகதி தமது பதவிலிருந்து விலகியிருந்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டது.

இந்த நிலையில், குறித்த வெற்றிடத்துக்கே, பொத்துவில் நகர சபையின் முன்னாள் தலைவரான அப்துல் வாஸித்தை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...

போர்ட் சிட்டி கடலில் காணாமல் போன பல்கலை மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீராடச்சென்று நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று(27)...