இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையின் கீழ் இயங்கும் புனரமைப்பு துணைத் துறையில் வேலைவாய்ப்புக்காக தகுதிவாய்ந்த தொழிலாளர்களை பதிவு செய்யும் வேலை இன்று (ஜூன் 27) தொடங்கப்படவிருந்தது. இது ஜூலை 01ஆம் திகதி வரை நடைபெறவிருந்தது.
இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால், இந்தப் பதிவுப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.