இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு, இங்குள்ள இரண்டு கோடி மக்களின் இறைமையான சொத்தாகும் என்றும், அதை எவராலும் மீளப்பறிக்க முடியாது என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதையடுத்து இந்திய மீனவர்கள் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கச்சத்தீவு ஒப்பந்தம் தவறான தீர்மானமாக இருந்ததெனவும் தெரிவித்து இருந்தார்.
இதைப் பொருத்துக்கொண்டு ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர், கச்சத்தீவு சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட முறையிலும் இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதென்று தெரிவித்துள்ளார்.