சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையால் ரத்து செய்யப்பட்டது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 146 பயணிகளுடன் புறப்படவிருந்த அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானப்பயணத்திற்குத் தயாராகியிருந்த நிலையில், விமானி தொழில்நுட்ப கோளாறை அடையாளம் கண்டுள்ளார். இதனால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, விமானம் இன்று இரவு அல்லது நாளை காலை புறப்படும் என தாய் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.