follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP2பயனர்கள் போனில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் சேமிக்கும் மெட்டா AI?

பயனர்கள் போனில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் சேமிக்கும் மெட்டா AI?

Published on

மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’ தொடர்பான புதிய தகவல், சமூக வலைதள பயனர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் கைபேசியில் உள்ள புகைப்படங்களை, ‘கிளவுட் பிராசஸிங்’ அம்சம் மூலம் ஸ்கேன் செய்து கிளவுடில் சேமிக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயனர்கள் தாங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யாத படங்களையும் மெட்டா ஏஐ ஸ்கேன் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளதாலும், இது பெரும் பிரைவசி சங்கடத்தை ஏற்படுத்துகிறது. மெட்டா தரப்பில் இது பயனர்கள் விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது என்றும், அவர்கள் விரும்பினால் இந்த அம்சத்தை எந்த நேரத்திலும் டிசேபிள் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், ‘கிளவுட் பிராசஸிங்’ அம்சத்தை ஆஃப் செய்தால், ஏற்கனவே சேகரிக்கப்பட்ட படங்கள் 30 நாட்களில் மெட்டா கிளவுடிலிருந்து நீக்கப்படும் எனவும் நிறுவனத்தினர் உறுதியளித்துள்ளனர்.

ஆனால், பயனர்கள் ஒப்புதல் அளிக்காத புகைப்படங்களை ஸ்கேன் செய்வது குறித்த இந்த நடவடிக்கை, மெட்டா ஏற்கனவே எதிர்கொண்ட பிரைவசி குறைந்தபட்ச தகுதியை மீறும் செயல்களையும் மீண்டும் நினைவூட்டுகிறது.

முன்னதாக, 2007 முதல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பெரியவர்களால் (adults) பதிவேற்றப்பட்ட உள்ளடக்கங்களை மெட்டா தனது ஏஐ மாடலுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தியதாக நிறுவனம் ஒப்புக்கொண்டதுடன், அதற்கான முழுமையான விளக்கங்களை வழங்க மறுத்தது.

தற்போது, பயனர்கள் அப்லோட் செய்யாத படங்களுக்கே மெட்டா ஏஐ அணுகும் நிலைமை, எதிர்காலத்தில் இந்த படங்களை ஏஐ பயிற்சிக்குப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கான பதிலை மெட்டா தரப்பில் நிர்வாகிகள் இன்னும் வழங்கவில்லை.

எனவே, மெட்டா சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் அனைவரும் பிரைவசி அமைப்புகளை பரிசீலித்து, அத்துடன் எவ்வித அனுமதியையும் வழங்கும் முன் கவனமாக இருக்க வேண்டும் என்பது முக்கியமாகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சென்னையில் இருந்து புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து

சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப...

யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தின் வருடாந்திர ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட...

ஜூனில் ஒரு இலட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூன் மாதத்தின் முதல் 26 நாட்களில், 116,469 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி...