follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP2தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

Published on

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மொசி-டங்கா வீதியில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று (29) பயணியர் பஸ்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிய பீச்சியான விபத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

மோதிய வேகத்தில் இரு பஸ்களும் தீப்பிடித்து எரிந்துள்ளதோடு, பயணிகள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போதிலும், பலரை காப்பாற்ற முடியவில்லை.

மேலும் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பயணிகள் இருந்த பஸ்சின் டயர் பஞ்சராக, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டதாக போலீசார் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...